Tuesday, December 6, 2016

மகப்பேறு காலத்தில் பயன்படுவது

தேவையான பொருள்கள்:

கொத்தமல்லி கீரை

நெய்

செய்முறை:

கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும்.

அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.

மருத்துவக்குணங்கள்:

கொத்தமல்லி கீரையை தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

இதனால் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு வழிவகுக்கும்.

கர்ப்பிணி தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கொத்தமல்லி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.

குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியடைவதோடு தோல் சம்பந்தமான நோய்களும் தாக்காது.

இத்தகைய நன்மைகள் நிறைந்த இந்த “கொத்தமல்லி தழையை” நாம் நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். வாழ்வில் வளம் பெறுவோம்.


வயிற்றுவலி குறைய


அறிகுறிகள்:

கர்ப்பவதிகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை.

சீரகம் தூள்.

நெய்.

செய்முறை:

இரண்டு தேக்கரண்டி சீரகத்தூளை மூன்று தேக்கரண்டி நெய்யில் குழைத்து வெற்றிலையின் பின்புறத்தின் மீது பூசி சட்டியை அடு்ப்பில் வைத்து சூடேற்றி வெற்றிலையின் மருந்து தடவிய பாகத்தை சட்டியின்படும்படி ஒவ்வொன்றாக வதக்கி 200 மி.லி தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து வயிற்றுவலி ஏற்படும்  நேரத்தில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்தால் கர்ப்பவதியின் வயிற்றுவலி குறையும்.




ஆரோக்கியமான பிரசவத்திற்கு


அறிகுறிகள்:

கர்ப்பிணி பெண்கள்.

தேவையான பொருட்கள்:

ஆடுதீண்டாப்பாளை வேர்.

செய்முறை:

ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் குறைந்து ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.



சீறுநீர் வெளியேற


அறிகுறிகள்:

சீறுநீர் பிரியாமை.


தேவையான பொருள்கள்:

இளநீர்.

பனங்கற்கண்டு.


செய்முறை:

கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் சீறுநீர் ந‌ன்றாக‌ பிரியும்.



கர்ப்பிணி பெண்களுக்கு


அறிகுறிகள்:

குழந்தை புரட்டல்.

தாகம்.

ஆராட்டம்.

தேவையான பொருள்கள்:

பூண்டு.

மஞ்சள்.

கொத்தமல்லி.

செய்முறை:

ஒரு முழு வெள்ளைப் பூண்டை எடுத்து நன்றாக தட்டி, ஒரு மஞ்சள் துண்டை எடுத்து அதையும் நன்றாக தட்டி அத்துடன் ஒரு கை கொத்தமல்லியையும் சேர்த்து புது சட்டியில் போட்டு ஒரு படி தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால் படியாக வற்ற வைத்து அடிக்கடி சிறுக சிறுக குடித்து வந்தால் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை புரட்டல், ஆராட்டம், தாகம் ஆகியவை குறையும்.




ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட


அறிகுறிகள் :

கருத்தரித்த பெண்கள்.

தேவையான பொருட்கள்:

ஆடாதோடை இலை, வேர்.

செய்முறை :

ஆடாதோடை இலை மற்றும் ஆடாதொடை வேர்  வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து 200 மி.லி நீரில் போட்டு 100 மி.லி ஆக வரும் வரை சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

குறிப்பு:

பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து பிரசவிக்கும் நாள் வரை காலை ஒரு வேளை மட்டும் கொடுத்து வர வேண்டும்.



உதிரச்சிக்கல் வெளிப்பட


அறிகுறிகள்:

வெளிப்படாத‌ உதிரச்சிக்கல்.

தேவையானப் பொருட்கள்:

பெருங்காயம்.

பூண்டு.

வெல்லம்.

செய்முறை:

பொரித்த பெருங்காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்து கொடுத்துவர பிரசவத்திற்கு பின் காணும் உதிரச்சிக்கல் ந்ன்கு வெளிப்படும்.



கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு


அறிகுறிகள்:

எடை குறைவு.

இரத்தம் குறைதல்.

தேவையானப் பொருட்கள்:

அத்திப்பழம்.

பேரீச்சை.

உலர் திராட்சை.

செய்முறை:

2 அத்திப்பழங்கள், 2 பேரீச்சை, சிறிதளவு உலர் திராட்சை இவற்றை காலையில் சாப்பிட்டுவந்தால் எடை குறைவ,இரத்தம் குறைதல் போன்ற பிரச்சனைகள் குறையும்.



கருத்தரித்தப் பெண்களுக்கு


அறிகுறிகள்:

கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி வாந்தி வருதல்.

தேவையான பொருட்கள்:

லவங்கம்.

செய்முறை:

லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வற்றிய பிறகு வடிகட்டி வைத்து கொண்டு  குடிக்க கொடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும்.




கர்ப்பிணி பெண்களுக்கு கை,கால் வீக்கம் குறைய


அறிகுறிகள்:

கை, கால் வீக்கம்

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை.

செய்முறை:

முருங்கை இலையை காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால் வீக்கம் குறையும்.



பேறுகால வலி


அறிகுறிகள்:

கர்ப்பிணி பெண்கள்.

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை.

கொத்தமல்லி.

செய்முறை:

சிறிதளவு முருங்கை இலை , கொத்தமல்லி இரண்டையும் நன்றாக வேகவைத்து  அந்த நீரைத் தினமும் 2 வேளை குடித்து வந்தால் பேறுகால வலி குறையும்.



கர்ப்பிணி பெண்களுக்கு


அறிகுறிகள்:

கர்ப்பிணி பெண்களுக்கு.

தேவையான பொருட்கள்:

அன்னாச்சிப்பழம்.

செய்முறை:

அன்னாச்சிப் பழம் சாப்பிட கூடாது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.



குழந்தை வளர்ச்சி பெற


அறிகுறிகள்:

குறைநத வளர்ச்சி.

தேவையான பொருட்கள்:

பேரிக்காய்.

செய்முறை:

தினமும் 1 பேரிக்காயை சாப்பிட்டு வர    குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.


குழந்தையின் ஊட்டச் சத்து


அறிகுறிகள்:

கை,கால் நடுக்கம்.

குழந்தைகள் ஊட்டச் சத்து பெற.

தேவையான பொருட்கள்:

மாம்பழம்.

செய்முறை:

தினமும் 1 மாம்பழம் சாப்பிட்டு வர  பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும்.